வியாழன், 30 செப்டம்பர், 2010
புங்குடுதீவு மண் ஈன்றெடுத்த இந்து மகேசின் பூவரசு பற்றிய செய்தி
-----------------------------------------------------------------------------------
பூவரசு நூறாவது சிறப்பிதழ்
எழுதியவர்: சோழியான்
திங்கள், 29 தை 2007
வெளிவந்துவிட்டது பூவரசு இனிய தமிழ் ஏட்டின் நூறாவது இதழ். ஜேர்மனி, பூவரசு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான 'பூவரசு' நூறாவது இதழில், 'எதிர்ப்படும் தடைகளைக் கடந்து இந்தப் பயணத்தை மேலும் இலகுவாக்குவதற்கு உங்களால்மட்டுமே இயலும். உங்கள் அன்பும் ஆதரவும் தொடரும்வரை பூவரசு இன்னும் பல தமிழ்ப் பூக்களைப் பூத்துச் செழிக்கும்' என்ற ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களின் முகவுரையானது, 'பூவரது தொடர்ந்து வருமா வராதா' என்ற என்ற வாசகர்களதும் படைப்பாளிகளதும் சந்தேகத்தைப் போக்கும்வண்ணம் உள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
ஊடகங்களின் வளர்ச்சி, இணையத்தின் வீக்கம், சூழலின் தாக்கம் எனப் புகலிடத் தமிழர்களது நேரங்கள் சுமைகளாகக் கழியும்போதும், பதினாறு வருடங்களாக புகலிடத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென்றொரு தரமான இடத்தைத் தக்கவைத்தவாறு, புதிய படைப்பாளிகளையும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வந்ததோடு, ஏற்கெனவே அறிமுகமாகிய படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் களமமைத்து அவர்களையும் உற்சாகப்படுத்தி, சிறுவர்களையும் தமிழால் வளைத்திழுக்கும் பூவரசானது நூறாவது இதழை எட்டிப்பிடித்திருப்பதானது, இந்துமகேஷ் என்பவரது தனிமனித சாதனையே என்றால் மிகையாகாது.
வாசகமலர்கள் பகுதியை கவனித்தால், 'எனது எழுத்துறவுக்கே அத்திவாரமிட்ட தாயேடு அல்லவா இந்த நற்றமிழ் ஏடு?' என விஜயா அமலேந்திரன் அவர்கள் மெய்சிலிர்க்க, லண்டனில் இருந்து த.சு.மணியம் அவர்கள் 'புலம்பெயர்ந்த மண்ணில் பல படைப்பாளிகளை வளர்த்துவிட்ட பெருமை பூவரசுக்குண்டு' என மெய்பகர, 'தாய்மண்ணின் வாசத்தோடு தரமான சஞ்சிகையாக தொடர்ந்து வரும் பூவரசு' என சுவிஸிலிருந்து ஏ.ஜே.ஞானேந்திரன் அவர்கள் பாராட்ட, ஜேர்மனியிலிருந்து நகுலா சிவநாதன் அவர்கள் 'ஆவரசாக ஒளிர்ந்து நாவரசாக நல்ல தமிழ் வளர்க்கும் பூவரசே, பாவரசெடுத்து வாழ்த்துகின்றேன்' என வாழ்த்துகிறார். இப்படி வாச(க)மலர்களின் வாழ்த்துக்கள் வளர்ந்து செல்கின்றன.
இதுவரை வெளிவந்த பூவரசின் 99 இதழ்களின் பார்வையில் திருமதி புஷ்பராணி ஜோர்ஜ் நடந்து செல்ல, 'அழகும் ஆபத்தும்' என சிந்தைக்கு தீனி தருகிறார் ஏ.ஜே.ஞானேந்திரன். 'என்னோடு பூவரசு' என மட்டுவில் ஞானக்குமாரன் அகமகிழ, 'பற்றும் வரவும்' என கோசல்யா சொர்ணலிங்கம் புகலிடத் தமிழ் இலக்கியத்துக்கு தரமான வரவொன்று தர, த.சு. மணியம் வாழும் வழி சொல்ல, 'இணைய இதழா, அச்சுப் பதிப்பா சிறந்தது?' என சந்திரவதனா செல்வகுமாரன் நிஜங்களின் பக்கம் அழைக்க, 'பாதை தெரிந்திருந்தால் பயணம் இலகுவாகும்' எனச் சிந்தனைச் செல்வர் எழிலன் உற்சாகப்படுத்த, 'குழந்தைகளின் ஆளுமையை வளர்ப்பது எப்படி?' என நகுலா சிவநாதன் பாதை காட்ட அழைக்க, 'அன்புப் பிணைப்பை' பகீரதி சுதேந்திரன் முன்வைக்க, நடுவே 'எங்கள் இளந்தளிர்கள்' கண்சிமிட்டி நிற்கின்றன. 'தேடுங்கள்' என திருமதி பு. சண்முகரத்தினம் விழிக்க, 'இருப்பவையும் இழப்பவையும்' என செ.பவானி விபரிக்க, 'பருந்துகள் பறக்கும் தேசத்தை' கொண்டு வருகிறார் என்.கே. மகாலிங்கம். 'சலிப்பு எதற்கு?' என மீண்டும் இந்துமகேஷ் அவர்கள் கேட்க, 'அம்மாவுக்குத் தெரிந்தது' என்று கதை சொல்கிறார் சந்திரவதனா செல்வகுமாரன். 'சொல்லமாட்டன்' என இராஜன் முருகவேல் அடம்பிடிக்க, 'சிரித்து வாழவேண்டும்' என்றவாறு டாக்டர் எவ்.ஆர். காப்மேயர் வர, 'உயர்வது எக்காலம்?!' என்ற ஆக்கத்தோடு பரம. விசுவலிங்கம். 'எங்கும்' என அம்பலவன் புவனேந்திரன் கவிதைச் சுவைக்குள் அமிழ்த்த, 'ஆசை'பற்றி இரா. சம்பந்தன் பகுத்தளிக்க, 'எங்கே வைத்தீர்கள் அடைவை' என்ற கேள்வியோடு மட்டுவில் ஞானக்குமாரன். வேதா இலங்காதிலகம் 'தனித்துவம் மறந்த நிலை' கூற, செளம்யன் 'யாழ்ப்பாண நூலகக் கனவுகளை' எம்முன்னே பரப்புகிறார்.
நூறாவது இதழின் பின்புற அட்டையில், விரைவில் 'புதிய பூக்கள்' எனும் இளையோர்க்கான புதிதாய் மலரும் இதழ், பூவரசு கலை இலக்கியத் தோட்டத்தில் இருந்து என்ற அறிவித்தல், பூவரசின் சுறுசுறுப்பான அடுத்த பாய்ச்சலுக்கு கட்டியம் கூறுவதோடு, இளையோர்களின் தமிழ் ஆர்வத்துக்கு ஊக்கமளிக்கப் போகிறது என்பதையும் நினைக்கும்போது, பூவரசு இலக்கியப் பேரவைக்கு வாழ்த்தும் நன்றியும் கூறாமலிருக்க முடியாது.
அதுமட்டுமா?
பூவரசின் இலக்கியப் பரப்பில் வாசகராகவோ படைப்பாளிகளாகவோ ஒவ்வொருவரும் பங்காற்றுவதன் மூலமாகவே, பூவரசிடமிருந்து மேன்மேலும் பலவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் உண்மைதானே?!
தொடர்புகளுக்கு:
Poovarasu,
Postfach 103401,
28034 Bremen,
Germany.
poovarasu_germany@hotmail.com
-----------------------------------------------------------------------------------
பூவரசு நூறாவது சிறப்பிதழ்
எழுதியவர்: சோழியான்
திங்கள், 29 தை 2007
வெளிவந்துவிட்டது பூவரசு இனிய தமிழ் ஏட்டின் நூறாவது இதழ். ஜேர்மனி, பூவரசு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான 'பூவரசு' நூறாவது இதழில், 'எதிர்ப்படும் தடைகளைக் கடந்து இந்தப் பயணத்தை மேலும் இலகுவாக்குவதற்கு உங்களால்மட்டுமே இயலும். உங்கள் அன்பும் ஆதரவும் தொடரும்வரை பூவரசு இன்னும் பல தமிழ்ப் பூக்களைப் பூத்துச் செழிக்கும்' என்ற ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களின் முகவுரையானது, 'பூவரது தொடர்ந்து வருமா வராதா' என்ற என்ற வாசகர்களதும் படைப்பாளிகளதும் சந்தேகத்தைப் போக்கும்வண்ணம் உள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
ஊடகங்களின் வளர்ச்சி, இணையத்தின் வீக்கம், சூழலின் தாக்கம் எனப் புகலிடத் தமிழர்களது நேரங்கள் சுமைகளாகக் கழியும்போதும், பதினாறு வருடங்களாக புகலிடத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென்றொரு தரமான இடத்தைத் தக்கவைத்தவாறு, புதிய படைப்பாளிகளையும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வந்ததோடு, ஏற்கெனவே அறிமுகமாகிய படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் களமமைத்து அவர்களையும் உற்சாகப்படுத்தி, சிறுவர்களையும் தமிழால் வளைத்திழுக்கும் பூவரசானது நூறாவது இதழை எட்டிப்பிடித்திருப்பதானது, இந்துமகேஷ் என்பவரது தனிமனித சாதனையே என்றால் மிகையாகாது.
வாசகமலர்கள் பகுதியை கவனித்தால், 'எனது எழுத்துறவுக்கே அத்திவாரமிட்ட தாயேடு அல்லவா இந்த நற்றமிழ் ஏடு?' என விஜயா அமலேந்திரன் அவர்கள் மெய்சிலிர்க்க, லண்டனில் இருந்து த.சு.மணியம் அவர்கள் 'புலம்பெயர்ந்த மண்ணில் பல படைப்பாளிகளை வளர்த்துவிட்ட பெருமை பூவரசுக்குண்டு' என மெய்பகர, 'தாய்மண்ணின் வாசத்தோடு தரமான சஞ்சிகையாக தொடர்ந்து வரும் பூவரசு' என சுவிஸிலிருந்து ஏ.ஜே.ஞானேந்திரன் அவர்கள் பாராட்ட, ஜேர்மனியிலிருந்து நகுலா சிவநாதன் அவர்கள் 'ஆவரசாக ஒளிர்ந்து நாவரசாக நல்ல தமிழ் வளர்க்கும் பூவரசே, பாவரசெடுத்து வாழ்த்துகின்றேன்' என வாழ்த்துகிறார். இப்படி வாச(க)மலர்களின் வாழ்த்துக்கள் வளர்ந்து செல்கின்றன.
இதுவரை வெளிவந்த பூவரசின் 99 இதழ்களின் பார்வையில் திருமதி புஷ்பராணி ஜோர்ஜ் நடந்து செல்ல, 'அழகும் ஆபத்தும்' என சிந்தைக்கு தீனி தருகிறார் ஏ.ஜே.ஞானேந்திரன். 'என்னோடு பூவரசு' என மட்டுவில் ஞானக்குமாரன் அகமகிழ, 'பற்றும் வரவும்' என கோசல்யா சொர்ணலிங்கம் புகலிடத் தமிழ் இலக்கியத்துக்கு தரமான வரவொன்று தர, த.சு. மணியம் வாழும் வழி சொல்ல, 'இணைய இதழா, அச்சுப் பதிப்பா சிறந்தது?' என சந்திரவதனா செல்வகுமாரன் நிஜங்களின் பக்கம் அழைக்க, 'பாதை தெரிந்திருந்தால் பயணம் இலகுவாகும்' எனச் சிந்தனைச் செல்வர் எழிலன் உற்சாகப்படுத்த, 'குழந்தைகளின் ஆளுமையை வளர்ப்பது எப்படி?' என நகுலா சிவநாதன் பாதை காட்ட அழைக்க, 'அன்புப் பிணைப்பை' பகீரதி சுதேந்திரன் முன்வைக்க, நடுவே 'எங்கள் இளந்தளிர்கள்' கண்சிமிட்டி நிற்கின்றன. 'தேடுங்கள்' என திருமதி பு. சண்முகரத்தினம் விழிக்க, 'இருப்பவையும் இழப்பவையும்' என செ.பவானி விபரிக்க, 'பருந்துகள் பறக்கும் தேசத்தை' கொண்டு வருகிறார் என்.கே. மகாலிங்கம். 'சலிப்பு எதற்கு?' என மீண்டும் இந்துமகேஷ் அவர்கள் கேட்க, 'அம்மாவுக்குத் தெரிந்தது' என்று கதை சொல்கிறார் சந்திரவதனா செல்வகுமாரன். 'சொல்லமாட்டன்' என இராஜன் முருகவேல் அடம்பிடிக்க, 'சிரித்து வாழவேண்டும்' என்றவாறு டாக்டர் எவ்.ஆர். காப்மேயர் வர, 'உயர்வது எக்காலம்?!' என்ற ஆக்கத்தோடு பரம. விசுவலிங்கம். 'எங்கும்' என அம்பலவன் புவனேந்திரன் கவிதைச் சுவைக்குள் அமிழ்த்த, 'ஆசை'பற்றி இரா. சம்பந்தன் பகுத்தளிக்க, 'எங்கே வைத்தீர்கள் அடைவை' என்ற கேள்வியோடு மட்டுவில் ஞானக்குமாரன். வேதா இலங்காதிலகம் 'தனித்துவம் மறந்த நிலை' கூற, செளம்யன் 'யாழ்ப்பாண நூலகக் கனவுகளை' எம்முன்னே பரப்புகிறார்.
நூறாவது இதழின் பின்புற அட்டையில், விரைவில் 'புதிய பூக்கள்' எனும் இளையோர்க்கான புதிதாய் மலரும் இதழ், பூவரசு கலை இலக்கியத் தோட்டத்தில் இருந்து என்ற அறிவித்தல், பூவரசின் சுறுசுறுப்பான அடுத்த பாய்ச்சலுக்கு கட்டியம் கூறுவதோடு, இளையோர்களின் தமிழ் ஆர்வத்துக்கு ஊக்கமளிக்கப் போகிறது என்பதையும் நினைக்கும்போது, பூவரசு இலக்கியப் பேரவைக்கு வாழ்த்தும் நன்றியும் கூறாமலிருக்க முடியாது.
அதுமட்டுமா?
பூவரசின் இலக்கியப் பரப்பில் வாசகராகவோ படைப்பாளிகளாகவோ ஒவ்வொருவரும் பங்காற்றுவதன் மூலமாகவே, பூவரசிடமிருந்து மேன்மேலும் பலவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் உண்மைதானே?!
தொடர்புகளுக்கு:
Poovarasu,
Postfach 103401,
28034 Bremen,
Germany.
poovarasu_germany@hotmail.com
கவிஞர் காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு

வாழ்வில் எத்தனையோ நபர்களைத் தினம் தோறும் சந்திக்கிறோம். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.
நீ
யாரையோ பார்த்து பிரமிக்கும்
அதே வினாடியில்
யாரோ
உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள்
என்று நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பேன். அவ்வப்போது சந்திக்கும் நபர்களையும், அவர்களுடன் பகிர்ந்து கொண்ட செய்திகளையும் வலையேற்றலாமே என்று திடீரென ஒரு சிந்தனை, அந்த சிந்தனையின் விளைவாகத் தான் இந்த முதல் பதிவு.
உங்கள்
அங்கீகாரம் கிடைத்தால் ஆனந்திப்பேன்.
விமர்சனங்கள் கிடைத்தால் வளர்வேன்.
பார்வையில் கூர்மையும், பேச்சில் நேர்மையுமாக புன்னகைக்கிறார் கவிஞர் காசி ஆனந்தன். வார்த்தைகளில் வீரியமடிக்கும் சிந்தனைகளுக்குச் சம்பந்தமில்லாத ஒல்லியான தேகம். ஈழப்போரின் நினைவுகள் அவருடைய கண்களில் கவலையையும், கனலையும் ஒருசேர அடித்து விட்டுப் போன சுவடுகள் பேச்சில் தவிர்க்க இயலாமல் தலை காட்டுகின்றன. அவருடைய படத்தை வைத்துத் தான் சிங்கள ராணுவத்தினர் குறிபார்த்துச் சுடும் பயிற்சி செய்வதாகவும், இவருடைய கவிதைகள் ஈழத் தமிழ் போராளிகளிடையே தமிழ் உணர்வை ஊற்றுவதாகவும் கதைகள் கேட்டதுண்டு.
வாழ்வில் சந்திக்கும் நபர்களில் எழுத்துகளுக்கும் பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கின்ற நிரப்பப்படாத பள்ளம் அவருடைய சந்திப்பில் இல்லை. பேசுவதை எழுதுகிறார் எழுதுவது அவருடைய வாழ்க்கை சார்ந்ததாகவோ, அல்லது வேட்கை சார்ந்ததாகவோ இருக்கிறது.
காலையில் தாமதமாக வரும் காய்கறி வியாபாரியிடம் ஏன் காலதாமதமாகி விட்டது என்பதைத் தமிழில் வினவுகையில் புரிந்து கொள்ள முடியாத நிலையில் காய்கறி வியாபாரி இருப்பதைக் கவலையுடன் தெரிவிக்கிறார். நான்கைந்து வேறுபட்ட வார்த்தைகளுடன் வினவியும் பதிலில்லாமல் கடைசியில் புரிந்து கொள்டவளாக ‘ஓ.. லேட்டானதை கேக்கறீங்களா சார்’ என்ற அவளுடைய பதில் தமிழின் மீதான அவருடைய ஆர்வத்தின் கால்களை உடைத்ததில் ஆச்சரியமில்லை.
பொங்கல் தினத்தில் பக்கத்து தெருவில் நடந்து சென்றபோது அத்தனை வீடுகளும் ‘ஹேப்பி பொங்கல்’ என்று ஆங்கிலத்திலோ, அல்லது ஆங்கிலத்தைத் தமிழிலோ வாழ்த்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் திடுக்கிடுகையில் நமக்கும் நம் மொழி மீதான ஆர்வத்தின் மீது திகில் படர்கிறது. ஏன் தமிழ் வளர்கிறது வளர்கிறது என்று போலித்தனமான சலுகைப் போர்வைகளைப் போர்த்தி நடக்கிறீர்கள் ? ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய தேசம் முழுவதும் பேசப்பட்டு வந்த மொழியாக தமிழ் இருந்ததற்கான வரலாறுகள் உள்ளன இன்று தமிழ் நாட்டில் மட்டும் பேசுகிறோம் இது வளர்ச்சியா ? இலங்கையில் ஒன்பது மாகாணங்களிலும் இருந்த தமிழ் இன்று இரண்டு மாகாணங்களுக்கு இடம் பெயர்ந்து தினமும் சிங்களத் தோட்டாக்களினால் நெற்றியில் புள்ளியிடப்பட்டு உயிரெழுத்துக்களெல்லாம் மெய்யெழுத்துக்களாகி வருகிறதே இது வளர்ச்சியா ? என்று அவர் பதை பதைப்புடன் வினவுகையில் அவரிடம் போலித்தனம் இல்லை. அரசியல் வாதி ஒருவர் தன்னுடைய இருக்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொல்லிக் கொள்ளும் சால்ஜாப்பு அறிக்கையாக அவருடைய பேச்சு இல்லை. வலிகளுடன் விழுகின்றன வார்த்தைகள். ஒரு சிறிய இடத்தில் துவங்கிய ஆங்கில மொழி உலகெங்கும் பரவியிருப்பதை வளர்ச்சி என்று சொல்லலாம், உலகின் பல இடங்களில் பரவி இருந்த தமிழ் ஒரு இடத்தில் சுருங்கியதை எப்படி வளர்ச்சி என்று கொண்டாடுவது என்று கேட்கையில் மறு பேச்சு பேச முடியவில்லை.
இலக்கியத்தின் பக்கமாக மெல்ல பேச்சைத் திருப்பினால் கண்கள் மின்னலடிக்க பேசுகிறார். அவருடைய பார்வையில் கவிதைகளை சிந்தல், நறுக்குகள், பாக்கள் என மூன்றாகப் பிரித்து பேசுகிறார். சாரலடிக்கும் மழையைப் போல, அல்லது அருவியில் விழும் நீரின் சாரல் போல மனதை தொட்டு சிலிர்க்க வைப்பது சிந்தனை. நறுக்கென்று தலையில் குட்டுவது போல, ஒரு வீச்சுடன் வந்து விழும் அருவி நீர் போல என்பது நறுக்கு. பா என்பது இசையுடன் கலந்தது என்று பிரித்துப் பேசி உதாரணங்கள் அடுக்குகையில் மனம் அவருடைய வாதத்தை, அவருடைய கவிதை பாணியை அங்கீகரிக்கிறது.
தமிழா / ஆடாய் மாடாய் ஆனாயடா / என்றேன் / கை தட்டினான் - என்பன போன்ற எழுத்துக்களை கவிதைகள் என்றால் மறுப்பதற்குத் தயாராக ஒரு கூட்டம் இருக்கலாம். ஆனால் நறுக்குகள் எனும் போது யாரும் வெறுக்க மாட்டார்கள் என்பதே கவிஞருக்கு ஒருவிதமான பொது அங்கீகாரம் கிடைப்பதற்கு ஏதுவாகிறது. தனிப்பட்ட முறையில் நறுக்குகளின் தீவிர ரசிகன் நான் என்பேன். அவற்றை வீரியமிக்க வாள் வீச்சுகளாய் பாவிக்கிறேன், அதையே கவிஞரும் விரும்புகிறான் என்றால் கவிஞரின் பார்வையில் வாசகனின் வாசிப்பு இயங்குவது ஒரு சமதளக் கண்ணோட்டமல்லவா.
தன்னிடமிருந்த கவிதைகளை ஈழத்தில், கண்ணீரின் ஈரத்தில் தொலைத்ததை ஒருவித சோகத்துடன் நினைவு கூர்கிறார். குருதியின் வாசனையோடு கவிதைகளும் மடிந்து போன சம்பவங்களை நினைவு கூர்கையில் அவருடைய முகம் குழந்தையைப் பறிகொடுத்த ஒரு தாயைப் போல பரிதவிக்கிறது. தூரத்தில் குரைக்கும் நாயோசை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வரும் ஈழத்தின் இரவுகளை நினைவு கூர்ந்தார். நாய் குரைக்கும் ஓசை நெருங்க நெருங்க விளக்குகளை அணைத்துவிட்டு துடிக்கும் இதயத்தின் ஓசையையும் கைகளால் தடுத்துக் கொண்டு, நாயோசையைத் தொடரும் காலடி ஓசைகள் தன் வீட்டு வாசலில் நின்று விடக் கூடாதே எனும் உயிர்ப்படபடப்பில் மரணத்தின் வாசனையை இரவுகளின் சுவாசித்துக் கழியும் தமிழர்களின் வாழ்க்கையை அவர் சொல்கையில் குரல் தழுதழுக்கிறது. சற்று நேரம் நிறுத்தி விட்டு, இலங்கை முழுவதும் தமிழர்களுக்குப் பதில் மலையாளிகளோ, தெலுங்கர்களோ இருந்திருந்தால் இதற்கு முன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு நீதி வழங்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா என்று இதுவரை யோசித்திராத கோணத்தில் ஒரு கேள்வியையும் வைக்கிறார்.
பேச்சு மீண்டும் மீண்டும் தமிழ் மொழியின் மீதே திரும்பியது அவருக்கு தமிழ்மீதாக இருக்கும் தாகத்தை மெய்ப்பிக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு சில கருத்துக்களை அவர் முன்வைக்கிறார்.
முதலாவது, தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப் படுவது என்பது தமிழை இழிவு படுத்துவது போல, தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்வியே எல்லா பள்ளிகளிலும் நிகழ்த்தப்பட வேண்டும். அது தான் உண்மையான தமிழ் வளர்ச்சிக்கு அடிகோலும். வேண்டுமானால் ஆங்கிலத்தைக் கட்டாயப் பாடமாக்கலாம். இன்றைக்கு தமிழை இந்தி அழித்துக் கொண்டிருப்பதாக எழும்புவது அரசியல் கடலில் அடிக்கும் மாய அலை. உண்மையில் ஆங்கிலச் சுனாமியில் சிக்கி தமிழ் தன்னுடைய முகத்தை சிதைத்துக் கொண்டிருப்பது தான் நிஜம்.
இரண்டாவது, தமிழ் நாட்டில் தமிழில் எழுதப்படும் எல்லா பெயர்ப்பலகைகளும் தூய தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிக் கலப்பு என்பது அறவே கூடாது. பிரான்ஸ் நாட்டில் ஒரு குழுவே இருக்கிறது. பிரான்ஸ் மொழியில் ஆங்கிலம் கலந்து எழுதினால் பிரஞ்ச் மொழியை அவமானப்படுத்துவதாக வழக்கிடும் உரிமை கூட உள்ளது. ஆனால் நமது நாட்டில் தான் தமிழுக்காகப் பாடுபட்ட மறை மலை அடிகளார் பாலத்தைக் கூட ‘மறைமலை அடிகள் பிரிட்ஜ்’ என்று எழுதிப் பழகுகிறோம்.
ஊடகங்களில் தமிழ் மொழி செம்மைப்படுத்தப் படவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இன்றைக்கு தமிழில் படமெடுத்தால் கூட அதை ஆங்கிலப் பெயருள்ள தொலைக்காட்சியில் தான் திரையிட வேண்டியிருக்கிறது என்று ஒருவர் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டிப் பேசுகிறார். தமிழ் மீதான ஆர்வம் எந்த அளவுக்கு ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதை அவருடைய பேச்சு தெளிவாக்குகிறது. நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சமாதானங்கள் உண்மையில் தமிழின் வளர்ச்சியின் மீது தடைக்கல்லாகத் தான் அமரும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.
பேச்சு தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதைப் பற்றித் திரும்புகிறது. பேச்சு கலகலப்பாகிறது. பாருங்கள் தமிழ்ப் படத்துக்கு தமிழில் பெயர் வைப்பதற்குக் கூட வரிச்சலுகை கொடுக்க வேண்டி இருக்கிறது. கூடவே தமிழ் அல்லாத பிற மொழிகளில் பெயர்வைத்தால் ஐம்பது சதவீதம் அதிக வரி என்று விதித்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்று தன்னுடைய கருத்தையும் வைக்கிறார்.
இருபத்து ஒன்பது ஆண்டுகாலம் காதலித்துத் திருமணம் செய்த அவருடைய நேசத்துக்குரிய மனைவி தேனீர் பரிமாற, அதை சுவைத்துக் கொண்டே தன்னுடைய இலக்கிய உலகின் அடுத்த எதிர்பார்ப்புகளையும், படைப்பு சார்ந்த விருப்பங்களையும், எழுதிக் கொண்டிருக்கும் பணிகளைப் பற்றியும் பேசுகிறார். இன்னும் சில காலம் தொடர்ந்து எழுதுமளவுக்கு அவரிடம் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன சிந்தனைகள் என்பது மட்டும் தெளிவாகிறது. ‘வன்ன மயில் இப்போது கூத்தாடுமா இல்லை போராடுமா ?’ என்ற ஒரு நாட்டியப் பாடலை எழுதி முடித்த கதையை விவரிக்கிறார். வன்னி மயில்கள் நிறைந்த பகுதி, இப்போதைய போர் சூழலில் சூழ்ந்திருக்கும் கரும் புகைகளினால், நீரைக் குடித்து நிமிராமல், உயிர்களைக் குடித்து நிறைந்திருக்கும் போர் மேகங்களினால் இந்த மயில்கள் தோகை விரித்தாடுமா இல்லை ஆயுதம் எடுத்து போராடுமா என்னும் கற்பனையை கவிஞர் விவரிக்கையில் சிலிர்த்துப் போய் பார்த்திருப்பதைத் தவிர வேறேதும் செய்யவில்லை நான்.
கடைசியில் என்னுடைய அடுத்த நூலுக்கான முன்னுரைக்காக கொண்டுசென்றிருந்த கவிதைக் காகிதங்களை அவரிடம் கொடுத்துவிட்டு விடைபெறுகையில் ஒரு முகமூடி அணியாத கவிஞரைச் சந்தித்துத் திரும்பிய மகிழ்ச்சி மனசெங்கும்.
வாழ்வில் எத்தனையோ நபர்களைத் தினம் தோறும் சந்திக்கிறோம். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.
நீ
யாரையோ பார்த்து பிரமிக்கும்
அதே வினாடியில்
யாரோ
உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள்
என்று நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பேன். அவ்வப்போது சந்திக்கும் நபர்களையும், அவர்களுடன் பகிர்ந்து கொண்ட செய்திகளையும் வலையேற்றலாமே என்று திடீரென ஒரு சிந்தனை, அந்த சிந்தனையின் விளைவாகத் தான் இந்த முதல் பதிவு.
உங்கள்
அங்கீகாரம் கிடைத்தால் ஆனந்திப்பேன்.
விமர்சனங்கள் கிடைத்தால் வளர்வேன்.
பார்வையில் கூர்மையும், பேச்சில் நேர்மையுமாக புன்னகைக்கிறார் கவிஞர் காசி ஆனந்தன். வார்த்தைகளில் வீரியமடிக்கும் சிந்தனைகளுக்குச் சம்பந்தமில்லாத ஒல்லியான தேகம். ஈழப்போரின் நினைவுகள் அவருடைய கண்களில் கவலையையும், கனலையும் ஒருசேர அடித்து விட்டுப் போன சுவடுகள் பேச்சில் தவிர்க்க இயலாமல் தலை காட்டுகின்றன. அவருடைய படத்தை வைத்துத் தான் சிங்கள ராணுவத்தினர் குறிபார்த்துச் சுடும் பயிற்சி செய்வதாகவும், இவருடைய கவிதைகள் ஈழத் தமிழ் போராளிகளிடையே தமிழ் உணர்வை ஊற்றுவதாகவும் கதைகள் கேட்டதுண்டு.
வாழ்வில் சந்திக்கும் நபர்களில் எழுத்துகளுக்கும் பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கின்ற நிரப்பப்படாத பள்ளம் அவருடைய சந்திப்பில் இல்லை. பேசுவதை எழுதுகிறார் எழுதுவது அவருடைய வாழ்க்கை சார்ந்ததாகவோ, அல்லது வேட்கை சார்ந்ததாகவோ இருக்கிறது.
காலையில் தாமதமாக வரும் காய்கறி வியாபாரியிடம் ஏன் காலதாமதமாகி விட்டது என்பதைத் தமிழில் வினவுகையில் புரிந்து கொள்ள முடியாத நிலையில் காய்கறி வியாபாரி இருப்பதைக் கவலையுடன் தெரிவிக்கிறார். நான்கைந்து வேறுபட்ட வார்த்தைகளுடன் வினவியும் பதிலில்லாமல் கடைசியில் புரிந்து கொள்டவளாக ‘ஓ.. லேட்டானதை கேக்கறீங்களா சார்’ என்ற அவளுடைய பதில் தமிழின் மீதான அவருடைய ஆர்வத்தின் கால்களை உடைத்ததில் ஆச்சரியமில்லை.
பொங்கல் தினத்தில் பக்கத்து தெருவில் நடந்து சென்றபோது அத்தனை வீடுகளும் ‘ஹேப்பி பொங்கல்’ என்று ஆங்கிலத்திலோ, அல்லது ஆங்கிலத்தைத் தமிழிலோ வாழ்த்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் திடுக்கிடுகையில் நமக்கும் நம் மொழி மீதான ஆர்வத்தின் மீது திகில் படர்கிறது. ஏன் தமிழ் வளர்கிறது வளர்கிறது என்று போலித்தனமான சலுகைப் போர்வைகளைப் போர்த்தி நடக்கிறீர்கள் ? ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய தேசம் முழுவதும் பேசப்பட்டு வந்த மொழியாக தமிழ் இருந்ததற்கான வரலாறுகள் உள்ளன இன்று தமிழ் நாட்டில் மட்டும் பேசுகிறோம் இது வளர்ச்சியா ? இலங்கையில் ஒன்பது மாகாணங்களிலும் இருந்த தமிழ் இன்று இரண்டு மாகாணங்களுக்கு இடம் பெயர்ந்து தினமும் சிங்களத் தோட்டாக்களினால் நெற்றியில் புள்ளியிடப்பட்டு உயிரெழுத்துக்களெல்லாம் மெய்யெழுத்துக்களாகி வருகிறதே இது வளர்ச்சியா ? என்று அவர் பதை பதைப்புடன் வினவுகையில் அவரிடம் போலித்தனம் இல்லை. அரசியல் வாதி ஒருவர் தன்னுடைய இருக்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொல்லிக் கொள்ளும் சால்ஜாப்பு அறிக்கையாக அவருடைய பேச்சு இல்லை. வலிகளுடன் விழுகின்றன வார்த்தைகள். ஒரு சிறிய இடத்தில் துவங்கிய ஆங்கில மொழி உலகெங்கும் பரவியிருப்பதை வளர்ச்சி என்று சொல்லலாம், உலகின் பல இடங்களில் பரவி இருந்த தமிழ் ஒரு இடத்தில் சுருங்கியதை எப்படி வளர்ச்சி என்று கொண்டாடுவது என்று கேட்கையில் மறு பேச்சு பேச முடியவில்லை.
இலக்கியத்தின் பக்கமாக மெல்ல பேச்சைத் திருப்பினால் கண்கள் மின்னலடிக்க பேசுகிறார். அவருடைய பார்வையில் கவிதைகளை சிந்தல், நறுக்குகள், பாக்கள் என மூன்றாகப் பிரித்து பேசுகிறார். சாரலடிக்கும் மழையைப் போல, அல்லது அருவியில் விழும் நீரின் சாரல் போல மனதை தொட்டு சிலிர்க்க வைப்பது சிந்தனை. நறுக்கென்று தலையில் குட்டுவது போல, ஒரு வீச்சுடன் வந்து விழும் அருவி நீர் போல என்பது நறுக்கு. பா என்பது இசையுடன் கலந்தது என்று பிரித்துப் பேசி உதாரணங்கள் அடுக்குகையில் மனம் அவருடைய வாதத்தை, அவருடைய கவிதை பாணியை அங்கீகரிக்கிறது.
தமிழா / ஆடாய் மாடாய் ஆனாயடா / என்றேன் / கை தட்டினான் - என்பன போன்ற எழுத்துக்களை கவிதைகள் என்றால் மறுப்பதற்குத் தயாராக ஒரு கூட்டம் இருக்கலாம். ஆனால் நறுக்குகள் எனும் போது யாரும் வெறுக்க மாட்டார்கள் என்பதே கவிஞருக்கு ஒருவிதமான பொது அங்கீகாரம் கிடைப்பதற்கு ஏதுவாகிறது. தனிப்பட்ட முறையில் நறுக்குகளின் தீவிர ரசிகன் நான் என்பேன். அவற்றை வீரியமிக்க வாள் வீச்சுகளாய் பாவிக்கிறேன், அதையே கவிஞரும் விரும்புகிறான் என்றால் கவிஞரின் பார்வையில் வாசகனின் வாசிப்பு இயங்குவது ஒரு சமதளக் கண்ணோட்டமல்லவா.
தன்னிடமிருந்த கவிதைகளை ஈழத்தில், கண்ணீரின் ஈரத்தில் தொலைத்ததை ஒருவித சோகத்துடன் நினைவு கூர்கிறார். குருதியின் வாசனையோடு கவிதைகளும் மடிந்து போன சம்பவங்களை நினைவு கூர்கையில் அவருடைய முகம் குழந்தையைப் பறிகொடுத்த ஒரு தாயைப் போல பரிதவிக்கிறது. தூரத்தில் குரைக்கும் நாயோசை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வரும் ஈழத்தின் இரவுகளை நினைவு கூர்ந்தார். நாய் குரைக்கும் ஓசை நெருங்க நெருங்க விளக்குகளை அணைத்துவிட்டு துடிக்கும் இதயத்தின் ஓசையையும் கைகளால் தடுத்துக் கொண்டு, நாயோசையைத் தொடரும் காலடி ஓசைகள் தன் வீட்டு வாசலில் நின்று விடக் கூடாதே எனும் உயிர்ப்படபடப்பில் மரணத்தின் வாசனையை இரவுகளின் சுவாசித்துக் கழியும் தமிழர்களின் வாழ்க்கையை அவர் சொல்கையில் குரல் தழுதழுக்கிறது. சற்று நேரம் நிறுத்தி விட்டு, இலங்கை முழுவதும் தமிழர்களுக்குப் பதில் மலையாளிகளோ, தெலுங்கர்களோ இருந்திருந்தால் இதற்கு முன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு நீதி வழங்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா என்று இதுவரை யோசித்திராத கோணத்தில் ஒரு கேள்வியையும் வைக்கிறார்.
பேச்சு மீண்டும் மீண்டும் தமிழ் மொழியின் மீதே திரும்பியது அவருக்கு தமிழ்மீதாக இருக்கும் தாகத்தை மெய்ப்பிக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு சில கருத்துக்களை அவர் முன்வைக்கிறார்.
முதலாவது, தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப் படுவது என்பது தமிழை இழிவு படுத்துவது போல, தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்வியே எல்லா பள்ளிகளிலும் நிகழ்த்தப்பட வேண்டும். அது தான் உண்மையான தமிழ் வளர்ச்சிக்கு அடிகோலும். வேண்டுமானால் ஆங்கிலத்தைக் கட்டாயப் பாடமாக்கலாம். இன்றைக்கு தமிழை இந்தி அழித்துக் கொண்டிருப்பதாக எழும்புவது அரசியல் கடலில் அடிக்கும் மாய அலை. உண்மையில் ஆங்கிலச் சுனாமியில் சிக்கி தமிழ் தன்னுடைய முகத்தை சிதைத்துக் கொண்டிருப்பது தான் நிஜம்.
இரண்டாவது, தமிழ் நாட்டில் தமிழில் எழுதப்படும் எல்லா பெயர்ப்பலகைகளும் தூய தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிக் கலப்பு என்பது அறவே கூடாது. பிரான்ஸ் நாட்டில் ஒரு குழுவே இருக்கிறது. பிரான்ஸ் மொழியில் ஆங்கிலம் கலந்து எழுதினால் பிரஞ்ச் மொழியை அவமானப்படுத்துவதாக வழக்கிடும் உரிமை கூட உள்ளது. ஆனால் நமது நாட்டில் தான் தமிழுக்காகப் பாடுபட்ட மறை மலை அடிகளார் பாலத்தைக் கூட ‘மறைமலை அடிகள் பிரிட்ஜ்’ என்று எழுதிப் பழகுகிறோம்.
ஊடகங்களில் தமிழ் மொழி செம்மைப்படுத்தப் படவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இன்றைக்கு தமிழில் படமெடுத்தால் கூட அதை ஆங்கிலப் பெயருள்ள தொலைக்காட்சியில் தான் திரையிட வேண்டியிருக்கிறது என்று ஒருவர் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டிப் பேசுகிறார். தமிழ் மீதான ஆர்வம் எந்த அளவுக்கு ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதை அவருடைய பேச்சு தெளிவாக்குகிறது. நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சமாதானங்கள் உண்மையில் தமிழின் வளர்ச்சியின் மீது தடைக்கல்லாகத் தான் அமரும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.
பேச்சு தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதைப் பற்றித் திரும்புகிறது. பேச்சு கலகலப்பாகிறது. பாருங்கள் தமிழ்ப் படத்துக்கு தமிழில் பெயர் வைப்பதற்குக் கூட வரிச்சலுகை கொடுக்க வேண்டி இருக்கிறது. கூடவே தமிழ் அல்லாத பிற மொழிகளில் பெயர்வைத்தால் ஐம்பது சதவீதம் அதிக வரி என்று விதித்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்று தன்னுடைய கருத்தையும் வைக்கிறார்.
இருபத்து ஒன்பது ஆண்டுகாலம் காதலித்துத் திருமணம் செய்த அவருடைய நேசத்துக்குரிய மனைவி தேனீர் பரிமாற, அதை சுவைத்துக் கொண்டே தன்னுடைய இலக்கிய உலகின் அடுத்த எதிர்பார்ப்புகளையும், படைப்பு சார்ந்த விருப்பங்களையும், எழுதிக் கொண்டிருக்கும் பணிகளைப் பற்றியும் பேசுகிறார். இன்னும் சில காலம் தொடர்ந்து எழுதுமளவுக்கு அவரிடம் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன சிந்தனைகள் என்பது மட்டும் தெளிவாகிறது. ‘வன்ன மயில் இப்போது கூத்தாடுமா இல்லை போராடுமா ?’ என்ற ஒரு நாட்டியப் பாடலை எழுதி முடித்த கதையை விவரிக்கிறார். வன்னி மயில்கள் நிறைந்த பகுதி, இப்போதைய போர் சூழலில் சூழ்ந்திருக்கும் கரும் புகைகளினால், நீரைக் குடித்து நிமிராமல், உயிர்களைக் குடித்து நிறைந்திருக்கும் போர் மேகங்களினால் இந்த மயில்கள் தோகை விரித்தாடுமா இல்லை ஆயுதம் எடுத்து போராடுமா என்னும் கற்பனையை கவிஞர் விவரிக்கையில் சிலிர்த்துப் போய் பார்த்திருப்பதைத் தவிர வேறேதும் செய்யவில்லை நான்.
கடைசியில் என்னுடைய அடுத்த நூலுக்கான முன்னுரைக்காக கொண்டுசென்றிருந்த கவிதைக் காகிதங்களை அவரிடம் கொடுத்துவிட்டு விடைபெறுகையில் ஒரு முகமூடி அணியாத கவிஞரைச் சந்தித்துத் திரும்பிய மகிழ்ச்சி மனசெங்கும்.
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
Make This Site My HomePage
பாடல்கள் |
Raaga |
Chennai Tamil |
Eelam Mp3 |
Shaiva Audio |
My Tamil Mp3 |
Mp3 Axe |
Tamil Wire |
Tamil Paddu |
Oru Web |
M Lanka |
Good Lanka |
Hi2 FM |
Tamil Ent.. |
Tamil GSM |
Cooldls |
Tamil Strings |
Hi2 Web |
NK Dreams |
All Indian |
Tamil Jothy |
Thesam |
Indo Mp3s |
Hi2world |
Good Lanka |
Kathal Mp3 Desam |
Online Tamil Mp3 |
Tamil Rocks |
Tamil Mp3 Site |
Central Musiq |
Tamil Musica |
Inimai |
Old Tamil Songs |
Hummaa |
Dishant |
Vanni Net |
மோகன்குமார் |
தூள் |
ஐகரன் |
ஓசை |
தமிழ் பீற் |
தமிழ் மசாலா |
தமிழ் கிரவுண்ட்ஸ் |
தமிழ்ப்பூங்கா |
இந்தியா கிளிட்ஸ் |
தமிழ் மசாலா |
தமிழ் எம்பி3 வேர்ல்ட் |
கோல்டன் தமிழ் |
இசைத் தென்றல் |
கீதம் |
தமிழ் எம்பி3 சிட்டி |
நடிகைகள் & நடிகர்கள் |
Simran |
Sneha |
Abhirami |
Aishwarya-rai |
Kiran |
Laila |
Meena |
Jothika |
Sangavi |
Swathe |
Shalini |
mumtaz |
Reemasen |
asinonline |
Ajith |
Dhanush |
Prashanth |
Vikram |
Madhavan |
Surya |
Vijay |
Srikanth |
Sivaji-Prabhu |
Arjun |
Sarath Kumar |
Vijaykant |
Abbas |
Kamalagashan |
Download |
messenger.msn |
messenger.yahoo |
Skype Messenger |
WinZip |
Download Accelerator |
Real Player |
Windows Media Player10 |
Winamp Player |
Mp3RadioPlayer |
Flash Player |
Shockwave Player |
Macromedia |
Adobe |
nero |
Internet Explorer |
Netscape |
Mozilla Firefox |
Opera |
Java sun |
Picasa |
Wrar |
Ulead vidio |
Free download |
பொது தகவல்கள் |
தமிழ் றீ சேர்ஐ; |
தமிழ்ச் சமூகம் |
kuviyam |
அமைப்புக்கள் |
Troonline |
Teedor |
un |
unicef |
Troitaly |
Anpuellam |
VRO Swiss |
ஜோதிடம் |
ஜோதிடம் |
Suryannamboothiry |
Astrologi2005 |
Jothidaboomi |
Astrovisiononline |
Astroadvice |
Astrology |
Arulsothidam |
தொழில்நுட்பம் |
Technologyreview |
Nist |
ls.eso |
Java sun |
wntechnology |
Technocadd |
Worldscientist |
Sci.esa |
bbc |
கல்வி |
கல்விச்சேவை |
யாழ். சென்ஜோன்ஸ் |
திருகோணமலை இந்து |
சாவகச்சேரி இந்து |
ஹாட்லி கல்லூரி |
கொக்குவில் இந்து |
தமிழ் செஸ் |
Jaffna Central - Canada |
University of Jaffna |
cutsa |
University of Moratuwa |
University of Kelaniya |
University of Colombo |
The Open Uni of SL |
Uni of Sri |
University of Peradeniya |
Jayewardenepura |
இணைய விளையாட்டுகள் |
2500 கேம்ஸ் |
லேகோ |
நிக் ஜுனியர் |
மினி கிளிப் |
டிஸ்னி |
கவிதைகள் |
kavimalar |
Kavithai |
Meena |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)